இது தான் காங்கிரசின் சுயரூபம்..


அது ஒரு கரு நாகம்..

எண்ணிக்கை உயர்ந்த உடன் அதன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது..
காங்கிரஸ் கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று
மத்தியில் ஆட்சி நடத்தும் போதெல்லாம் தங்களுக்கு வேண்டாத மாநில அரசுகளைத் தான்தோன்றித்தனமாக கலைப்பதும், தன் அரசியல் எதிரிகளை தருதலைத்தனமாக பழிவாங்குவதும், அதற்கு தன் எவலாளாக மாநில ஆளுநர்களையே பயன்படுத்திக்கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் குணாம்சமாகும்.. அது தான் அதன் கலாச்சாரமுமாகும்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்று மன்மோகன் வரை தொடர்கிறது.. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்ய தேவையான எண்ணிக்கை கிடைத்துவிட்டால் போதும் அதற்கு எதேச்சதிகார திமிரும் கூடவே வந்துவிடும்..
அண்மை ஆண்டுகாலமாக மக்களவையில் காங்கிரசுக்கு தேவையான எண்ணிக்கை இல்லாமல் மாநில கட்சிகளையே நம்பி இருந்ததால் அதனுடைய அதிகாரப்பல் பிடுங்கப்பட்டு எதேச்சதிகார விஷத்தை கக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அனால் இந்த 15 வது மக்களவை தேர்தல் முடிவு வெளியானவுடன் அந்த கருநாகத்தின் எதேச்சதிகார விஷப்பல் வலுப்பெற்றுவிட்டது. மீண்டும் அதன் பழைய சாக்கடை கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது..
அந்த கலாச்சாரப் புழுதி தான் மீண்டும் கேரளா மாநிலம் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது. கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பினராயி விஜயன் எதிராக சேற்றை வாரி இரைத்திருக்கிறார்கள். ஆளுநரைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரசின் சாக்கடை குணாம்சத்தின் ஒரு பகுதியே ஆகும்.
முன்பு எல்லா மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த போதும் இப்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலும் மத்தியிலும் ஊழல் பெருச்சாலிகளை தன்னகத்தே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தோழர். பினராயி விஜயன் மீது சேற்றை வாரி இரைப்பதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி....

*********************************************************

0 கருத்துகள்:

கருத்துரையிடுக