ஜூன் 8 - உலக கடல்கள் தினம்




கடல் அன்னையை பாதுகாப்போம்....

08 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) அனுசரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ. நா. சபை இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Oceans Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
பூமி உருண்டையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள கடல்களால் நமக்கு என்ன நன்மைகள்..
# நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது.
# பூமியின் வெப்பத்தை குறைக்கிறது.
# சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
# மீன் போன்ற கடல் உணவுகளை நமக்கு தருகிறது (கடல் உணவு மூளை
வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது)
# கடல் வாழ் உயிரினங்கள் மூலம் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.
# கடல் சார்ந்த வேலைவாய்ப்பையும் அதற்கேற்ற வருமானத்தையும்
தருகிறது.
# எல்லாவற்றிற்கும் மேலாக நம் சமையல் சுவைபட நாம் சேர்க்கும் உப்பை
தருகிறது.
எனவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம்.. கடல் அன்னையை பாதுகாப்போம்.. கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம்..
***************************************************************************

0 கருத்துகள்:

கருத்துரையிடுக