நம்ம கடற்கரைய விக்கபோராங்கோ....



நாமிருக்கும் நாடு நாமதென்பதறிவோம்....

நடுத்தர மக்களும் ஏழை மக்களும் செலவில்லாமல் பொழுதுபோக்கும் இடம் இயற்கை எழில் கொஞ்சும் நம்ம கடற்கரை தானுங்க.. அதான் நம்ம பீச்ச தான்
சொல்றேங்க.. நம் நாட்டை சுற்றி இருக்கிற மூன்று கடற்கரை பகுதிகளை அமெரிக்க முதலாளிகளுக்கு நமது மத்திய அரசாங்கம் விக்கப்போராங்கலாம்..
என்னங்க அநியாயமா இருக்கு..
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளின்
ஒரு பகுதியாக இந்திய கடலோரப் பகுதிகளை தனியார்மயப்படுத்தவும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை வெளிநாட்டினர்க்கு விற்பனை செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட்டிலும் அந்நிய நேரடி முதலீட்டை
அனுமதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
இதன் மூலம் கடற்கரையோரங்களில் ஒவ்வொரு 30 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் கட்டிகொள்வதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு அனுமதியளிப்பது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அவர்கள் எத்தனை கி. மீ. வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அவர்களிடம் விலையோ வாடகையோ மிகக்குறைவாகத் தான் வசூலிப்பார்கள்.
# அப்படி கட்டப்பட்ட துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான ஆழம் போதாது. எனவே 16 மீட்டர் வரை ஆழப்படுத்திக்கொள்வார்கள். அப்படி ஆழப்படுத்துவதற்கு தூர்வாரி எடுக்கப்படும் மணல் குவியல்களை என்ன செய்யப் போராங்கத் தெரியுமா.. அலை வந்து மோதும் அந்த கரையை ஒட்டியப் பகுதியிலேயே - கடல் தண்ணீரிலேயே கொட்டி பெரிய பரப்பளவுள்ள மணற்பகுதியை உருவாக்குவாங்க.. அப்படி உருவாக்கப்படும் நிலப்பகுதியே குறைந்தது 200 ஏக்கருக்கு மேல் கிடைக்குமாம்... அதை வெச்சி என்னா செய்வாங்கனா..!
குறைந்த வாடகைக்கு துறைமுகத்தை நடத்தும் அந்த அந்நிய முதலாளிகள் புதிதாய் உருவாக்கிய அந்த நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வார்கள்.. அதுவும் யாருக்குன்னா.. அமெரிக்க முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது..
# அப்படி வாங்கிய அந்த நிலப்பகுதியில் அந்த முதலாளிகள் நட்சத்திர ஓட்டல்கள் கட்டிப்பாங்கலாம்.. ரிசார்ட்.. மால்.. இப்படி என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கட்டிப்பாங்கலாம்.. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கலாமாம்.. தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. டவுன்ஷிப் கூட உருவாக்கலாமாம்..சிறிய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு இறங்குவதற்கு வசதி செய்யப்படுமாம்.. இது எப்படி இருக்கு.. நல்லா இருக்கு இல்ல..
# அதுமட்டுமல்ல.. இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் கடற்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் போன்ற கடல் உணவுப் பொருட்களை
அமெரிக்காவிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாக கொள்ளையடித்து செல்வார்களாம்.. குடும்பத் தொழிலாக - பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டு மீனவர்கள் இனி மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்களாம்.. அவங்க வாய்ல மண்ணு தான்.. நமக்கும் இனிமேல் மீன் இறால் கிடைக்காது.. வசதியுள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்..
இப்படி துறைமுகம் வருவதால் என்ன நன்மை.. நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும்.. யாருக்குன்னா.. அமெரிக்க இளைஞர்களுக்குத்தான்.. நல்லா இருக்கு இல்ல.. நம் நாட்டு இளைஞர்கள் வாயில கைய வெச்சிகிட்டு இருக்கவேண்டியது தான்.
இந்த துறைமுகம் வருவதனால் நமக்கென்ன பாதகம்..
# பாரம்பரிய தொழில் செய்யும் நம் மீனவர்களுக்கு வேலையிழப்பு.. வருமானம் இழப்பு.. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்..
# கடற்கரையை ஒட்டியே காலங்காலமாக வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்..
# நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும்.. ( கவலைபடவேண்டாம் அங்கிருக்கும் mall லில் பாக்கெட்டிலும் பாட்டிலிலும் கண்டிப்பாக குடிநீர் கிடைக்கும்)
# கடற் பகுதியிலிருந்து 30 கி.மீ. வரை விவசாயம் பாதிக்கப்படும்.. (எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும்)
# கடல் உணவுகளான மீன், இறால் போன்றவை கொள்ளைபோகும்.. கடல் உணவிலும் பஞ்சம் ஏற்படும்..
# கடல் நீரும் காற்றும் மாசுபடும்.. சுற்றுசூழல் பாதிக்கப்படும்..
# வாரந்தோறும் நம் வீட்டுக் குழந்தைகளை பீச்சுக்கு போகலாம்னு அழைத்துச் செல்கிறோமே.. அது இனி முடியாது.. பீச்சு போய் பாக்கனும்னா நுழைவுகட்டணம் வசூலிப்பார்கள்.. காசுக் கொடுத்து தான் இனி நாம் பீச்சில் காற்று வாங்க வேண்டும்.. பீச்சை இப்பவே படம்பிடித்து வெச்சிக்கொங்கோ..
இனிமேல்.. கடலோரம் வாங்கிய காற்று
குளிராக இருந்தது நேற்று.. அப்படின்னு தான் நாம் பாடவேண்டியிருக்கும்..
ஒன்னே ஒன்னு சொல்லிக்க்றேனுங்க இவ்வளவு சொல்லியும் நமக்கு கோபமே வராதுங்க..
**********************************************************

4 கருத்துகள்:

ramsngopal சொன்னது…

It's a quite dangerous thing u have posted. But u see all over the history people will revolt at the right time.

mpsubramanian சொன்னது…

kopam varadhu.varave varadhu.mahakavi Bharathiyar vandhu kavidhai vasikkanum.

புதுவை இராம்ஜி சொன்னது…

மற்றுமொரு சுதந்திர போராட்டம்
மீண்டும் பிறந்து வா பாரதி..
இப்படி தான் அழைக்கவேண்டும்.

பாரதி செல்லம்மா சொன்னது…

இனி கடல்காற்று வாங்கவும் காசு தானா
நடுத்தர மக்களின் முக்கியமான பொழுது போக்கு இடமே கடற்கரை தான்
அதுவும் போச்சா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நம்ம நாடு ரொம்ப தான் முன்னேறுகிறது

கருத்துரையிடுக