ஏப்ரல் 22 - பூமி தினம்


பூமி சூடாகிறது.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும்.. அப்போதுதான் நம் வருங்கால தலைமுறையினர் நிம்மதியாக வாழமுடியும். அதற்கு கொதிக்கும் நம் பூமியை குளிரச்செய்யவேண்டும்.. அதற்காக நாம் செய்யவேண்டியது என்னன்னா.. # நாம் பயன்படுத்தும் வாகனங்களில் பெட்ரோல் - டீசல் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது குறைத்துகொள்ளவாவது வேண்டும். # அதேபோல் வீடுகளில் - அலுவலகங்களில் - வியாபாரதளங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரம் மற்றும் குளிர்சாதன பெட்டிபயன்படுத்தபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். # வீடுகளிலும், வீட்டைச்சுற்றிலும், சாலையோரங்களிலும் நிறைய மரங்களைஅவசியம் வளர்க்கவேண்டும். குறிப்பாக மாமரம், அரசமரம் நல்லது. ( மாமரம் - கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு வாயுக்களை அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மைவாய்ந்தது. அரசமரம் - இருபத்திநான்கு மணி நேரமும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடக்கூடிய தன்மையுடையது )# கூடியமட்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். மக்காத இந்த பொருட்களை பூமியில் கண்ட கண்ட இடங்களில் போடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். # நம் கல்வி முறையை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மாற்றியமைத்தால் தான் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்று நம்மால் முடிந்தவைகளை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதன் மூலம் சூடேறும் பூமியை குளிரச்செய்வோம்.. நம் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாப்போம்..

**************************************************

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

Aaha Thozhare

Naam vaazhum boomiyai paatbhukaakka vendiya
udanadi thevaiyai thangalin ezhuthukkal unarthuhindrana ilaya thalaimuraiyinarukku
intha thalaimurai seyya vendiyathum ethirkaalathil ilaiya samuthayam kavalaindri vaazhavum naam theriya vendiya avasiyangalai unarthi vittana ungal ezhuthukkal

கருத்துரையிடுக