மே தினம் - உழைப்பாளி மக்களின் உரிமை தினம்
ஏப்ரல் 22 - பூமி தினம்

பூமி சூடாகிறது.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும்.. அப்போதுதான் நம் வருங்கால தலைமுறையினர் நிம்மதியாக வாழமுடியும். அதற்கு கொதிக்கும் நம் பூமியை குளிரச்செய்யவேண்டும்.. அதற்காக நாம் செய்யவேண்டியது என்னன்னா.. # நாம் பயன்படுத்தும் வாகனங்களில் பெட்ரோல் - டீசல் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது குறைத்துகொள்ளவாவது வேண்டும். # அதேபோல் வீடுகளில் - அலுவலகங்களில் - வியாபாரதளங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரம் மற்றும் குளிர்சாதன பெட்டிபயன்படுத்தபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். # வீடுகளிலும், வீட்டைச்சுற்றிலும், சாலையோரங்களிலும் நிறைய மரங்களைஅவசியம் வளர்க்கவேண்டும். குறிப்பாக மாமரம், அரசமரம் நல்லது. ( மாமரம் - கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு வாயுக்களை அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மைவாய்ந்தது. அரசமரம் - இருபத்திநான்கு மணி நேரமும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடக்கூடிய தன்மையுடையது )# கூடியமட்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். மக்காத இந்த பொருட்களை பூமியில் கண்ட கண்ட இடங்களில் போடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். # நம் கல்வி முறையை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மாற்றியமைத்தால் தான் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்று நம்மால் முடிந்தவைகளை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதன் மூலம் சூடேறும் பூமியை குளிரச்செய்வோம்.. நம் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாப்போம்..
**************************************************

