இது நல்லதல்ல....

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
அருமை தோழர் நன்மாறன் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்பது மிகவும் கண்டிக்க தக்கது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அமைதியான முறையில் தேர்தலை சந்திக்க திராணி இல்லாதவர்கள், வன்முறை தாக்குதல்கள் மூலம் குழப்பங்களை செய்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று திராவிட முன்னேற்றக்கழக தலைமை கனவு காண்கிறது. இதை மதுரை மக்கள்- தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது. இவர்களை தூக்கி எறியவேண்டும்.
கன்று குட்டியை கொன்ற குற்றத்துக்காக தன் மகன் மீது தேர் சக்கரத்தை ஏற்றி கொன்ற மன்னன் ஆண்ட மண் இது.. மன்னன் தவறான தீர்ப்பு வழங்கியதற்காக மதுரையையே எரித்த பெண் வாழ்ந்த மண் இது..
தவறு செய்யும் மகனை தக்க சமயத்தில் தண்டிக்காத தந்தையும், தவறு செய்யும் ஆட்சியாளர்களை தக்க சமயத்தில் தண்டிக்காத மக்களும் எதிர்காலத்தில் அல்லல்பட வேண்டிவரும் என்பதை மறந்துவிட கூடாது..
இது நல்லதல்ல..
*****************************************************************************

1 கருத்துகள்:

புதுவை ஞானகுமாரன் சொன்னது…

may naal vaazhthukkal thozhar by rns

கருத்துரையிடுக