அறிமுகம்


அன்பு வணக்கங்கள்.. வலை பூவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
ஆயுத எழுத்து.... பயந்துவிட வேண்டாம். இது வன்முறையை தூண்டி உயிரை கொல்லும் ஆயுதமல்ல.. வரைமுறையில்லா ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் எழுத்து தான் இந்த ஆயுத எழுத்து.. இந்த தேசத்து அப்பாவி மக்களின் -
அறியாசனங்களின் அறியாமையை போக்கும் எழுத்து தான் இந்த ஆயுதஎழுத்து. ஏகாதிபத்தியத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக பாதிக்கப்பட்டவர்கள் எறிந்த செருப்பும் ஆயுதம் தான். அவர்கள் கோபமும் நியாயம் தான்..
அப்பாவி ஏழை மக்களின் மீது அக்கறை காட்டாது பெரு முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மட்டுமே எஜமான விசுவாசம் காட்டும் இந்திய ஆட்சியாளர்களை கண்டு எனக்கும் அதிக கோபம் தான்..
இந்த தேசத்திற்கு எதிராக- நம் மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை கண்டு மிக அதிக கோபம் தான்..
மதத்தின் பெயரால் விஷத்தை தூவி இந்த தேசத்தை துண்டாட நினைக்கும் மதவெறி கூட்டத்தை கண்டு எனக்கும் மிகப்பெரிய கோபம் தான்..
ஆனால் இவர்களுக்கு எதிராக நான் என் செருப்பை தூக்க மாட்டேன்..
அவர்கள் மீது தூக்கி எரிந்து என் செருப்பை அசிங்க படுத்த மாட்டேன்..

என் எழுத்துகள் தான் ஆயுதமாய் அவர்கள் மீது பாயும்.. இந்த ஆயுதம் மேலும் கூர்மை பெற செழுமை பெற ஆதரவும் ஆலோசனையையும் வழங்குங்கள்
என அன்புடன் கேட்டுகொள்கிறேன்..
தோழமையுடன்,
புதுவை ராம்ஜி
புதுச்சேரி

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

nandru thozhara.unagaludaiya muyarche vetri adaiya ennudaiya vazhuthukkal.thangal aayutha ezhuththu muyarche payanathil ennudaiya aatharavai enendrum ennal mudindavarai alikka kathirukiren...
VAZHUTHUKKAL
THOZHAMAIUDAN,
S.Anbarasi.

kumaran சொன்னது…

hi sir,sorry , for writting in english, when will you come to online , i am senthil from tindivanam, here after i frequently visit the site , i will do my best as i can. i cann't wish because younger than all of u, i pray this social awarness site will serve these such a good thing to our for long life without any deviatation .senthill21@yahoo.com

கருத்துரையிடுக