யாரை நொந்துகொள்வது.. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை
நிறைவேற்றினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்
என்று சொன்னது யார் தெரியுமா..? சாதாரண பாமரன் அல்ல.. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தான் இப்படி
திருவாய் மலர்ந்தது.. அதுவும் எங்க பேசியிருக்கார் தெரியுமா..?
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது இவ்வாறு மிரட்டி இருக்காரு..
ஏற்கனவே முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களும்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. சமூக நீதிக்கு எதிரான இது போன்ற கட்சிகளின் இம்மாதிரியான செயல்பாடுகள் அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது..
யாரை நொந்துகொள்வது..? இவர்களையா..! இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையா..!
"பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" - இது பெண்களுக்கு வீரத்தை
ஊட்டுவதற்கு புரட்சிக்கவி பாரதி எழுதிய வீர வரிகள்.. இருந்தாலும் இந்த பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.. இந்த பாட்டையும் அவர்களையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா சொல்லிட்டேன்..
**********************************************************
