பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நமது செல்வம் கொள்ளைபோக ஒரு சட்டம்..!



எல். . சி யை தனியார்க்கு விற்க மன் மோகன் அரசு சூழ்ச்சி..
தொடரும்..

ஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..


பொதுத்துறை எல். . சி யை பாதுகாப்போம்..

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன்
248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை
தேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த
தோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்..
இவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது
கண்டிக்க வேண்டிய செயலாகும்.
இப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்..
*******************************************************