
முதல் பெண் சபாநாயகரை வாழ்த்தி வரவேற்போம்....
இந்தியாவின் மதிப்புமிக்க பாராளுமன்றத்தின் உயர் பொறுப்புக்கு
முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிலும்
ஒரு தலித் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியுடன்
வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக
இடதுசாரிகளின் முயற்சியால் முதல் முறையாக ஒரு பெண்மணி
தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு நல்ல தொடக்கமாகவும், சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் பெண்களுக்கு அளிக்கவேண்டிய
அங்கிகாரமும் பங்கும், இந்தியா விடுதலை அடைந்து 62 ஆண்டுகள்
கழித்து தாமதமாக கிடைத்தாலும் இது ஒரு நல்ல மாற்றமே.
மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.
அதிலும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டையே கிடப்பில்போட்ட ஆணாதிக்க சிந்தனையாளர்களை கொண்ட நம் பாராளுமன்றத்தில்
அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பெண்மணியை
தேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றமே..
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்ற புரட்சிக்கவி பாரதியின்
வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் அம்மையார் அவர்கள்
பல ஆண்டுகளாக திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள 33% மகளிர் இடவொதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறைகாட்டவேண்டும்.. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.
********************************************************
