மேற்கு வங்க இடது முன்னணி அரசை வாழ்த்துவோம்


செங்கொடி உயர்த்தி பிடிப்போம்

மேற்கு வங்க இடது முன்னணி அரசு ஜூன் 21 ஞாயிறு அன்று 33 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1977 ஆம் ஆண்டில் இதே நாளில், ஜனநாயக முறைப்படி நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பதவியேற்று இன்று வரை 32 ஆண்டுகளையும் கடந்து தொடர்வது என்பது உலக ஜனநாயக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாகும்.
இதை பொறுக்க மாட்டாத சீர்குலைவு பிற்போக்கு - வகுப்புவாத சக்திகளான பி ஜே பி., மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ், நக்சலைட் அமைப்புகள் மற்றும் இவர்களை தூண்டிவிடும் அந்நிய சக்திகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளெல்லாம் ஒன்றாக கைகோர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. # படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியை சீர்குலைவு செய்யும் வண்ணம் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் கலகத்தை அரங்கேற்றி தொழிற்சாலைகளை விரட்டியடித்ததும், # லால்கார் பகுதியில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடி இன மக்களை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதும், # ஒன்று பட்ட மாநிலத்தை துண்டாக்குவதன் மூலம் இடது முன்னணி அரசை செயலிழக்கச்செய்து விடலாம் என்ற நப்பாசையில் டார்ஜிலிங், கூச்பிகார், ஜல்பைகுரி மாவட்டங்களில் தனிமாநிலம் என்ற முழக்கத்தை கிளப்பிவிட்டு வன்முறையையும் கலவரங்களையும் தூண்டிவிட்டதும் மேற்கூறிய நாசகர கும்பல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளையும் மீறி அங்கே செங்கொடி விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாசகர கும்பலும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்து வெற்றிபெற்றாலும், இடது முன்னணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது தற்காலிகமானதே. உயர்ந்து நிற்கும் செங்கொடி மீண்டும் வெற்றிபெற்று மாற்ற மாநிலங்களுக்கும் எப்போதும் போல் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி செய்வதற்கு தேவையான அதிக பெரும்பான்மையுடன் இருந்தாலும் தனித்து தான் மட்டும் ஆட்சி செய்யாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற இடதுசாரி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களித்திருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
*********************************************************************************

0 கருத்துகள்:

கருத்துரையிடுக